Tuesday, December 25, 2007

Paarthadhil Rasithavai -1

Tv was on n i was reading 'The client' by grisham...I usually don't care which song is played when i am reading a book...I jus want some song in the background..but the moment i saw this song in tv, i really liked it the first time i heard it..Surprisingly, this is the title song of a serial 'kadhalikka neramillai' in vijay tv..now before anyone starts...i dont watch serials n i have never seen this one before too..I liked the music, the voice of the gal who starts of in the beginning of the song and the lyrics could easily be among the best i hav seen for a romantic film song..

If anyone has any idea who the lyricist or singer is...let me know..




lyrics :

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்
(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோஉன் கனவினில் நிறைவது
யாரோஎன் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே
(என்னைத் தேடி)

Thursday, December 06, 2007

கந்தலாய் கசக்கிப் போடும்
அன்றாட வாழ்வின் துயரங்களிலும்
துயரங்களை நெஞ்சில் சுமந்து
தலை தடவிய காதலிலும்
காதல் அள்ளித் தந்த
உயிர் பிரியும் வலியிலும்
வலியில் மயிலிறகாய் வருடி
ஆறுதலாய் தோள் தந்த நட்பிலும்
நட்பு நிலையில்லாத உறவாய்
பிரிந்து சென்ற வேதனைகளிலும்
குழம்பித் தவிக்கிற மனதில்மழலையாய்
உன் மடியில்மகிழ்ந்திருந்த
என் நினைவுகள்மத்தாப்பூவாய் விரிகிறது
மழலையாகவே இருந்திருக்கலாமோ?
ஏங்கித் தவிக்கிறேன்
ஏனம்மா வளர்ந்தேன்???